வசந்தா ஜெகதீசன்

நேரம்….
ஓடியே நகரும் ஒட்டமாய் ஓடும்
ஓய்வற்ற முட்களின் ஒப்பற்ற பிரசவம்
தேய்மானம் அற்றது தேசத்தை ஆள்வது
நகரும் வலுவிலே நாட்களாய் மலர்வது
ஆண்டென விளையும் ஆதாரப் பரிதி
அனுதின விடியலின் அட்சய புள்ளி
பிறப்பிலும் இறப்பிலும் பின்னியே பிணைந்தது
திரும்பாத தேட்டமிது
முன்னோக்கி முயல்வது
முன்னேற்றக் கணிப்பிது
முட்களின் கூட்டிது
முழு உலகின் ஆதாரம்
வாழ்வின் வேராகும்
வற்றாத பேராறு.!
நன்றி மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading