கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

மேதின மேன்மையிலே…

உழைப்பெனும் உளியின் ஓர்தினமே
உழைப்பாளி வர்க்கத்தின் மேதினமே
நாளும் முட்கம்பி வேலிக்குள்
நம்மையே ஆளும் நம்சக்தி
வலம்வந்து மலர்கின்ற வையகம்
மெழுகென உருகிடும் உழைப்பாளி
ஒளி தந்து ஒளிர்கின்ற தொழிலாளி
இதயத்தை வருடிட வருவாயோ
ஈரத்தின் நிலவரம் உணர்வாயா
காயத்தின் தென்பு கூலியே
கடக்கின்ற பொழுதுகள் நம்பிக்கையில்
விதைக்கின்ற அறுவடை விருட்சங்களே
காலப் பரிதியின் கைங்கரியம்
ஞாலத்தின் மேன்மைக்கு ஒளியேற்றி
உயர்வே அனுதினம் விதைப்பாகும்
உயர்வழி ஒளிக்குள் இருபாதை
உயர்வும் தாழ்வும் உராய்ந்தெழுமே
அறுவடை அகிலத்தின் அச்சாணி
ஆயினும் தொழில்நிலை வெவ்வேறே
மேதின மேன்மையில் விழித்திறந்து
விருட்சத்தின் நாற்றை தோப்பாக்கு
வேற்றுமை தொழிலில் புகட்டாது
வென்றிட வாழ்தல் கொழுகொம்பே
அனுதின ஆற்றல் அடிப்பலமே
ஆளும் உலகை தொழில்த்தினமே!
நன்றி

நல்ல வடப்பிடிப்பில் சான்றுரைத்து
உயர்வினை அனுதினம் விதைப்பாக்கும்
உபாதையும் இடைக்கிடை வெளிப்படுமே
உயர்வும் தாழ்வும் உராய்ந்தெழும்
உள்ளக் குமுறலும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading