திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
விழிப்பு
களிப்பாகும் ஆயுளுக்கே
கருத்தினிலும் கடமையிலும்
கவனமுடை விழிப்பு வேண்டும்!
இருப்பினைக் காத்திடவும்
இலக்கினை வென்றிடவும்
துருப்பாகி விழிப்புத்தானே
தொய்வற்ற வழிபகரும்!

அஞ்ஞானப் போர்வையிடை
ஆக்கலைப் புதைக்கின்ற
அர்த்த்மற்ற மூடத்தினை
அம்பாகித் தகர்த்திடவே
ஆழக் கடலான
அறிவென்னும் விழிப்பு வேண்டும்!

நெஞ்னிலே ஈரமின்றி
நெருப்பாகிக் கருக்குகின்ற
நீசத்தனம் கொண்டோர்
நித்திலத்தில் நித்தமுமாய்
பொறுப்பாக வென்றிடவே
பெருநிதியே விழிப்புத்தானே!

துளிர்ப்பாகிச் செழித்திட்டே
துருவமென மின்னலிடும்
துவழாத நெஞ்சினையே
தொட்டுவரும் வெற்றியெல்லாம்
துள்ளலிடும் விழிப்புத்தானே!

கீத்தா பரமானந்தன்
06-05-24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading