தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கவிதை நேரம்-09.05.2024 கவி இலக்கம்-1870 “அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே” ——–

கவிதை நேரம்-09.05.2024
கவி இலக்கம்-1870
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”
————————–
ஐயிரண்டு திங்கள் அவனியிலே என்னைச் சுமந்து
பகல் இரவு பாராமல் விழித்திருந்து
பட்டினியையும் ஒழுங்கே பறக்கவிட்டு
அவனியிலே உதிரத்தையே சிந்தியவள்
கருவிலே காத்து சுமந்தவள்
கண்ணென எண்ணி காத்து கிடந்தவள்
கைகளிலும் இடுப்பு தோள்களிலும்
சுமைகளான பொழுதுகளையும்
சுமமாக எண்ணி எனைக் காத்தவள்
இரத்தத்தை பாலாக்கினாள்
முத்தத்தை அன்பு பரிசாக்கினாள்
துன்பம் அகற்றி பொறுமைசாலியானாள்
மனதெல்லாம் மனக்கோட்டை எழுப்பினாள்
அகிலத்தை அறிய வைத்தவளே
அறிவுச் செல்வத்தை எனக்களித்திட்ட
தியாகச் சுடரல்லவா என் அன்னை
அன்னையின் அன்பிற்கு அகிலத்தில் நிகருண்டோ
வையகத்தில் உயரச் செய்து
அன்னையர் தின வாழ்த்தோடு வாழ்த்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading