10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கவிதை நேரம்-09.05.2024 கவி இலக்கம்-1870 “அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே” ——–
கவிதை நேரம்-09.05.2024
கவி இலக்கம்-1870
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”
————————–
ஐயிரண்டு திங்கள் அவனியிலே என்னைச் சுமந்து
பகல் இரவு பாராமல் விழித்திருந்து
பட்டினியையும் ஒழுங்கே பறக்கவிட்டு
அவனியிலே உதிரத்தையே சிந்தியவள்
கருவிலே காத்து சுமந்தவள்
கண்ணென எண்ணி காத்து கிடந்தவள்
கைகளிலும் இடுப்பு தோள்களிலும்
சுமைகளான பொழுதுகளையும்
சுமமாக எண்ணி எனைக் காத்தவள்
இரத்தத்தை பாலாக்கினாள்
முத்தத்தை அன்பு பரிசாக்கினாள்
துன்பம் அகற்றி பொறுமைசாலியானாள்
மனதெல்லாம் மனக்கோட்டை எழுப்பினாள்
அகிலத்தை அறிய வைத்தவளே
அறிவுச் செல்வத்தை எனக்களித்திட்ட
தியாகச் சுடரல்லவா என் அன்னை
அன்னையின் அன்பிற்கு அகிலத்தில் நிகருண்டோ
வையகத்தில் உயரச் செய்து
அன்னையர் தின வாழ்த்தோடு வாழ்த்திடுவோம்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...