16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மனோகரி ஜெகதீசன்
நிர்மூலம்
சிதைத்தார் எம்மொழியைச்
சிங்களத் திணிப்பால்
வதைத்தார் அழித்தார்
அக்கினிப் பொறியால்
உதைத்தார் தகர்த்தார்
ஊனமாக்கினர் நினைவிடங்களை
தள்ளி அகற்றித்
தமதாக்கினர் நிலங்களை
எள்ளித் தடுத்தனர்
நினைவேந்தல் நிகழ்வுகளை
நிர்மூலத்தின் உச்சமே
நினைவிடங்களின் தகர்ப்பு
நிகழ்த்திய நீசர்
காணவேண்டும் அச்சம்
வடுவல்ல நினைவிடம்
வீரத்தின் சுவடே நினைவிடம்
ஆர்த்தெழும் வீர உணர்வுகளின் உறைவிடம்
வீழ்த்தியவன் கபடத்தையும்
காட்டும் அடையாளம்
வீசியுடைததுவோ அதனால்தான் விலங்குப்பட்டாளம்
அடுத்தவர் வாழ்வில்
அவலத்தைக் கொட்ட
கொடுத்தவர் யாரோ
இவருக்குத் தூண்டல்
உரியன காணாது
உதிராது எம்முயிர்
ஊனத்துடன் வெந்து
உருக்காது எம்முடல்
காலமும் உணர்வும் களமும் கைகோர்க்கக்
கடையாருக்குக் கொடுப்போம் நாமும் பதிலடி
அப்போது காண்பார் இவரும் தீராத் தலையிடி
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...