பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

நிர்மூலம்

சிதைத்தார் எம்மொழியைச்
சிங்களத் திணிப்பால்
வதைத்தார் அழித்தார்
அக்கினிப் பொறியால்
உதைத்தார் தகர்த்தார்
ஊனமாக்கினர் நினைவிடங்களை

தள்ளி அகற்றித்
தமதாக்கினர் நிலங்களை
எள்ளித் தடுத்தனர்
நினைவேந்தல் நிகழ்வுகளை

நிர்மூலத்தின் உச்சமே
நினைவிடங்களின் தகர்ப்பு
நிகழ்த்திய நீசர்
காணவேண்டும் அச்சம்

வடுவல்ல நினைவிடம்
வீரத்தின் சுவடே நினைவிடம்
ஆர்த்தெழும் வீர உணர்வுகளின் உறைவிடம்

வீழ்த்தியவன் கபடத்தையும்
காட்டும் அடையாளம்
வீசியுடைததுவோ அதனால்தான் விலங்குப்பட்டாளம்

அடுத்தவர் வாழ்வில்
அவலத்தைக் கொட்ட
கொடுத்தவர் யாரோ
இவருக்குத் தூண்டல்

உரியன காணாது
உதிராது எம்முயிர்
ஊனத்துடன் வெந்து
உருக்காது எம்முடல்

காலமும் உணர்வும் களமும் கைகோர்க்கக்
கடையாருக்குக் கொடுப்போம் நாமும் பதிலடி
அப்போது காண்பார் இவரும் தீராத் தலையிடி

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading