செல்வி நித்தியானந்தன்

நிர்மூலம்

ஊரோடு ஓடிய
அவலம்
வேரோடு அழித்த
கோலம்
சீர்ரொடு வாழ்ந்த
பந்தம்
சின்னா பின்னாய்
சொந்தம்

விரும்பி உறவுகள்
காத்து
விழிமூடா வலிகளை
சுமந்து
வானமும் மழையாய்
பொழிந்து
மண்ணும் நிர்மூலம்
ஆனது

கொத்தாய் உயிரும்
அழிப்பு
கொலையாய் இதயத்
துடிப்பு
குருதியில் உடலும்
சிதைப்பு
இறுதியாய் ஆட்சி
அறிவிப்பு

கட்டிய கல்லறைகள்
மாயம்
களவாணிகள் செயலால்
காயம்
சிங்களம் மறந்ததா
நேயம்
சீற்றத்தால் அழித்த
நிர்மூலம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading