தீதும் நன்றும்

ராணி சம்பந்தர்

23.05.24
ஆக்கம் 317
தீதும் நன்றும்
திருப்தி என்பது தீராதது
அதிதிருப்தி என்றும்
மாறாதது
மனம் கொண்ட மாளிகை வாழாது
கனமோடு குமிறல் ஆனது

மனித நேயம் மறைய
இனத்துவேஷம் துரத்தி
பசி பட்டினி அறைய
பட்டம் படிப்பு எல்லாம்
தொலைந்தது

களவு வெட்டுக் குத்து
மரணம் பறை சாற்ற
உளவு தொட்ட விவசாயி
மன உளைச்சலிலானது

நன்மை,தீமை, நல்லது,
கெட்டது எது எனத் தெரியாது தீதும் நன்றும் என்று மனம்
போன போக்கில் தீயது
சிக்கி மனிதம் தொங்குகிறது.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading