திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

இலட்சியம் கொள்வாய்

சர்வேஸ்வரி சிவருபன்

இலட்சியம் கொள்வாய்

அறிவையும் கூட்டியே அன்பையும் வளர்ப்பாயே
அறத்தின் பாதையிலும் ஓங்கிடவும் நிற்பாய்
அணியாய் எழுவாய் வளமது சிறக்கவும்
அவனியிலே என்றுமே ஒற்றுமையும் சேரவும்

பண்போடு பாசமும் பற்றிடவே வேண்டும்
பழக்கத்திலே என்னாளும் ஒழுக்கமும் வேண்டும்
பாரம்பரியங்களைப் பேணிடவும் வேண்டும்
பரிவும் மேலோங்கக் கருணையும் வேண்டும்
உண்மையின் பாதையில் உயர்வாய் எழுவாய்
ஊழல்கள் இல்லாத சூழல்களை உருவாக்கு
உணர்வுடன் என்றுமே விழித்துமே நடப்பாய்
உலகிற்கு நல்ல சேவைகளைச் செய்வாய்
கண்ணியப் பாதையிலே களங்கம் இல்லையே
திண்ணமாக உணர்வாய் திகழும் வாழ்வும்
பண்ணிய தர்மமும் உன்னையும் காக்கும்
எண்ணியே வாழ்வில் இலட்சியம் கொள்வாய்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading