திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பாலதேவகஜன்

பாமுகமே வாழி

பார்ப்போரும் கேட்போரும்
பரவசம்! கொள்வாரே
படைப்போரும் பகிர்வோரும்
பரிணாமம்! அடைவாரே
பாமுகமே! உன் மலர்வாலே.

ஆற்றலும் ஆளுமையும்
அகன்றிடாது காத்துநின்ற
அரும்பணியை ஆற்றுகின்ற
பாமுகமே! போற்றி போற்றி.

தலைமுறைகள் தாண்டியுமே
தமிழ் பரம்பும் தம்பணியை
தளர்வின்றியே தொடர்ந்திடும்
பாமுகமே! போற்றி போற்றி.

இலைமறை காயாக
இருப்போரின் திறமைகளை
வெளிக்காட்டி ஒளிர்விக்கும்
பாமுகமே போற்றி போற்றி.

சந்தம் சிந்தும் சந்திப்பை
செவ்வனே ஆற்றுகின்ற
பாவையண்ணாவை தந்த
பாமுகமே! போற்றி போற்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading