தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

பிஞ்சினை வருத்தாதே

சர்வேஸ்வரி சிவருபன்

பிஞ்சினை வருத்தாதே

கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //

வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //

பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //

கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //

பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //

சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //

ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //

காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //

சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //

சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //

அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //

வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //

கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //

பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading