பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அது எது

ஜெயம் தங்கராஜா

கவி 731

எது அது

எனக்குள்ளும் உண்டு உனக்குள்ளும் உண்டு
யாரிடம் இல்லை இதன் செயற்பாடு
எவரிடம் இல்லை இதனது வெளிப்பாடு
என்னிடமில்லையென்றால் இல்லை அங்கு மெய்ப்பாடு

விலங்குகளிடமொன்றும் பெரிதாக நானிதைப் பார்த்ததில்லை
பட்சிகளிடமும் குறைந்தபட்சமேனும் நானிதை காணவில்லை
மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய திருவிளையாடலது
இயல்போ இயற்கையோ செயற்கையோ தெரியாதது

அன்று நக்கீரப்புலவரிடம் சிவபெருமான் காட்டியது
இன்றும் பெரும்பாலானோர் அட்டகாசமாய் காட்டுவது
நல்லதுக்கு உட்பட்டால் பொல்லாமை நிகழாது
கெட்டதற்கு பயன்படின் வாழ்க்கைக்கு மெய்யேது

பற்பலர் இதன்பால் கைதேர்ந்தவர்களாகவே உள்ளார்கள்
சிற்சிலர் அதையறியாது முட்டாள்கள் ஆனார்கள்
மெய்யதா பொய்யதா அறிந்திட ஞானமுமில்லை
செய்வார்கள் செயலில் இருப்பது தெரிவதுமில்லை

நாளுக்குநாள் கூச்சமேயின்றி வாழ்க்கையில் அரங்கேறும்
பயனடைந்தவர் இவராக பாதிக்கப்பட்டவர் வேறொருவராக
கையும் மெய்யுமாக பிடிபட்டாலும் சகசமப்பா
வாழ்க்கையிலை சக்கைபோடோபோடும் இவர்களுக்குத்தான் காலமப்பா

ஜெயம்
27-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading