மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அது எது

ஜெயம் தங்கராஜா

கவி 731

எது அது

எனக்குள்ளும் உண்டு உனக்குள்ளும் உண்டு
யாரிடம் இல்லை இதன் செயற்பாடு
எவரிடம் இல்லை இதனது வெளிப்பாடு
என்னிடமில்லையென்றால் இல்லை அங்கு மெய்ப்பாடு

விலங்குகளிடமொன்றும் பெரிதாக நானிதைப் பார்த்ததில்லை
பட்சிகளிடமும் குறைந்தபட்சமேனும் நானிதை காணவில்லை
மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய திருவிளையாடலது
இயல்போ இயற்கையோ செயற்கையோ தெரியாதது

அன்று நக்கீரப்புலவரிடம் சிவபெருமான் காட்டியது
இன்றும் பெரும்பாலானோர் அட்டகாசமாய் காட்டுவது
நல்லதுக்கு உட்பட்டால் பொல்லாமை நிகழாது
கெட்டதற்கு பயன்படின் வாழ்க்கைக்கு மெய்யேது

பற்பலர் இதன்பால் கைதேர்ந்தவர்களாகவே உள்ளார்கள்
சிற்சிலர் அதையறியாது முட்டாள்கள் ஆனார்கள்
மெய்யதா பொய்யதா அறிந்திட ஞானமுமில்லை
செய்வார்கள் செயலில் இருப்பது தெரிவதுமில்லை

நாளுக்குநாள் கூச்சமேயின்றி வாழ்க்கையில் அரங்கேறும்
பயனடைந்தவர் இவராக பாதிக்கப்பட்டவர் வேறொருவராக
கையும் மெய்யுமாக பிடிபட்டாலும் சகசமப்பா
வாழ்க்கையிலை சக்கைபோடோபோடும் இவர்களுக்குத்தான் காலமப்பா

ஜெயம்
27-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading