திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பருவம்

சந்தோசத்தை கவலைகளின்றி கொண்டாடிய பருவம்
கொஞ்சுகின்ற அழகோடு உலாவுகின்ற உருவம்
சிந்திவிடும் சிரிப்பிலங்கே உயிருங்கூட உருகும்
சித்திரமோ நித்திலமோ நிம்மதியும் பெருகும்

பூவெனவே தேகமென சின்னஞ்சிறு உலகம்
தூக்கிக்கொண்டு அணைத்துவிட கவலைகளும் விலகும்
அழகென்றால் அழகன்றோ குழந்தைகளின் வடிவம்
நிலவுங்கூட கீழிறங்கி விளையாடவே துடிக்கும்

குழந்தைப் பருவமது வாழ்க்கையதன் அன்பளிப்பு
மலர்ந்து வாடுமுன்பே வனப்பான துளிர்ப்பு
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கள்ளமில்லாச் சிரிப்பு
இல்லாமை அகற்றிவிடும் மண்ணுலகின் சிறப்பு

மென்மைப் பருவமது பூவினது தன்மை
உண்மை உருவமது உள்ளமோ வெண்மை
குழந்தையாக இருக்குமட்டும் இல்லையொரு துன்பம்
வளர்ந்தபின்பு தேடுகின்றேன் எங்கேயந்த இன்பம்

ஜெயம்
17-08-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading