25
Jun
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
25
Jun
“முகங்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல (624)
ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
வலி
வருங்காலத்தை எண்ணியெண்ணி அனுதின ஏக்கங்கள்
வருந்துயரில் உளத்திலும் உடலிலும் தாக்கங்கள்
வலிகள் அனைவரது வாழ்க்கையிலும் உண்டுதான்
வழிகள் அடைபடவே பலரிங்கே கலங்குவதுமேன்
கேள்விக்குறியாக உள்ள கைவிடப்பட்டோரின் எதிர்காலம்
மூழ்கும் கப்பலென அந்தரித்த கோலம்
அனாதைகளாக இவரை யார்தான் படைத்தார்
வினாவிது விடையிருந்தால் அறிந்தவரும் யார்யார்
எளியவரை விடாமல் விரட்டுகின்ற வறுமை
வழியின்றி உதவியின்றி வாடுவதும் கொடுமை
மேல்தட்டு கீழ்த்தட்டென ஆக்கப்பட்ட உலகம்
பாழ்பட்ட வாழ்வினரின் துன்பமெப்போ விலகும்
ஒருவேளை உணவுக்காக ஒருபக்கம் போராட்டம்
அருந்தியுண்டு களிப்பவர்கள் மறுபக்கம் கொண்டாட்டம்
துயரங்களை சுமந்துகொண்டு நகருகின்ற ஒருசாரார்
உயரங்களில் இருந்துகொண்டு ஈயாதோரையும் பாரீர்
ஜெயம்
09-09-2024
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...