பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
வலி
———-
வார்த்தைகள் அளந்து
பேச வேண்டும்
வார்த்தைகள் கண்டபடி
பேசினால்
மனதில் ஏற்படும் வலி
சிலர் செய்கையால்
மனமோ தவிக்கும் வலி
சொந்தம் பந்தம் என
அருகில் நின்று தரும்வலி
நட்பு என்று சொல்லி
நாவினால் பேசுவது வலி
நொந்து போன உள்ளத்தை
நோண்டி விறாண்டுவது வலி
எச்சங்கள் சொச்சங்கள்
தூற்றுவது வலி
உடைந்த உள்ளமதை
உணர்ச்சிகளை புரியாது
புத்தி சொல்வதாய் கொல்வது வலி
இத்தனை வலியையும் இறைவன்
கொடுத்தது
என்துணை என்னுடன்
இல்லாத தாலோ
இதைவிட பெரிய வலி
என்ன!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
9.9.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading