சாளரத்தின் ஒளியினிலே 680

Selvi Nithianandan சாளரத்தின் ஒளியினிலே 680 19.09.2024

சாளரத்தின் ஒளியினிலே

தென்றலும் இதமாய் வந்தாலே
மேனியும் சிலிர்ப்பாய் குளிரும்
தெளிவாய் பரிதி தெரிந்தாலே
அகமும் மகிழ்சியில் நனையும்

வெளியிலே பூக்களின் அழகும்
வேடிக்கை பார்த்து இரசிப்பதும்
வெண்பனி காலமும் வந்திடும்
வெள்ளையாய் தெருவே மாறிடும்

கண்ணை கவரும் விளக்குகள்
கலராய் தெரியுமே காட்சிகள்
விண்ணும் மண்ணும் மாற்றங்கள்
விடியலின் ஒளியும் மகிழ்வாகுமே.

Nada Mohan
Author: Nada Mohan