Selvi Nithianandan

பெருச்சாளி

பெருச்சாளி கதை
கொஞ்சம் கேளு
பெரும் பணத்தை
சுருட்டினாரு பாரு
பெட்டி கட்டிதானே
கெத்து காட்டினாரு
பொட்டகம் நிரப்பி
வழி அனுப்பினாரு

கள்ளக் காசுகள்
களம் அடித்தாரு
கண்டம் கடந்து
காசு மறைந்தாரு
கதி கலக்கமாய்
கண் உருட்டுராரு
களவாணி கூட்டத்தை
கரம் ஒடிப்பாரு

போதை கடத்தலுக்கு
கூட்டணி சேர்ந்தாரு
பாதை வழித்தடமாய்
பட்டையும் அடித்தாரு
பதவி மோகத்தால்
பலதை பண்ணிணாரு
பக்க பலமுமாய்
பாரைத் திறந்தாரு

பெருச்சாளி புடிக்க
பொறி வைப்பாரு
பெத்த வயிறுகூட
பிளந்து எரியும்பாரு
பிணமும் எழுந்து
பிரமிக்கும் பாரு
பெரும் துண்டுடிட்டு
வரவேற்க்கும் நாடே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading