” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

பெருச்சாளி

பெருச்சாளி கதை
கொஞ்சம் கேளு
பெரும் பணத்தை
சுருட்டினாரு பாரு
பெட்டி கட்டிதானே
கெத்து காட்டினாரு
பொட்டகம் நிரப்பி
வழி அனுப்பினாரு

கள்ளக் காசுகள்
களம் அடித்தாரு
கண்டம் கடந்து
காசு மறைந்தாரு
கதி கலக்கமாய்
கண் உருட்டுராரு
களவாணி கூட்டத்தை
கரம் ஒடிப்பாரு

போதை கடத்தலுக்கு
கூட்டணி சேர்ந்தாரு
பாதை வழித்தடமாய்
பட்டையும் அடித்தாரு
பதவி மோகத்தால்
பலதை பண்ணிணாரு
பக்க பலமுமாய்
பாரைத் திறந்தாரு

பெருச்சாளி புடிக்க
பொறி வைப்பாரு
பெத்த வயிறுகூட
பிளந்து எரியும்பாரு
பிணமும் எழுந்து
பிரமிக்கும் பாரு
பெரும் துண்டுடிட்டு
வரவேற்க்கும் நாடே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan