அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஷாமினி துவாரகன்

அழைக்கின்றேன் மகளை
கோவில் சென்று வர
கேட்கிறாள் காரணம்
எதற்கு தான் என்று…..

சூரவதை பார்க்க
சீக்கிரம் கிளம்பு
பாணக்கம் வாங்கி வர
பாத்திரமும் எடு…….

தேவர் குலம் காத்த
வேலன் புகழ் எல்லாம்
பாட்டி சொல்லக் கேட்டதுண்டு
பார்க்க வேண்டும் நேரிலதை ……

பட்டு பாவாடை உடன்
சாந்துப் பொட்டும் வைத்து
பின்னிய சடையிடை
மல்லிகைப் பூவும் வைத்து ……

சட்டென்று வந்து நின்ற
செல்லமகள் முகம் பார்த்து
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன் .

அசுரனை அழித்த
அந்தக் கதை மட்டுமல்ல
அந்நிய நாட்டிலும்
அழியாது பேணி வரும்
கலாசாரம் எண்ணி
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன்.

-ஷாமினி துவாரகன்-
12.11.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading