ஒளியிலே தெரிவது..!!

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2057!!

ஒளியிலே தெரிவது..!!

விட்டில் பூச்சி வீழ்ந்தெழும் ஒளியோ
விருப்புடன் இருள் கலைக்குமோ
கரும்புகை உமிழ்ந்திடும் கலையோ
கருணை சிந்திடும் நிலை தானோ..

ஈகையின் குணம் உணர்த்தும் வழியோ
இனமானம் காக்க சென்றோர் நிழலோ
ஒளியிலே தெரிவது யாதெனக் கேளும்
ஓங்கார ரூபனின் விழியது தானோ..

வாழ்வினை இழந்தவனுக்கு வளமா
வண்ணக் கற்பனைக்கு கொடையோ
எண்ணச் சிதறலின் வரைபடமோ
வலி விலக்கி வழி காட்டி நீதானோ!!

உயிர்த்தியாகம் செய்தோர் வதனமோ
உறவினர் விழி நீரின் வடி கால்களோ
மண்ணுக்குள் மாணிக்கம் என்பதோ
திசை காட்டி விசைகூட்டும் ஆசானோ
சிவதர்சனி இராகவன்
14/11/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading