கமலா ஜெயபாலன்

கவி அழகு
அழகு அழகு கவியழகு
அமிர்தம் சிந்தும் மதியழகு
உள்ளம் நினைக்கும் வடிவமது
உன்னதமான உலகமது

வண்ணம் சிந்தும் வர்த்தைகளால்
வரைந்து வடிக்கும் ஓவியமே
கண்ணில் தோன்றும் கவர்ச்சிதனை
கயல்மீன் என்றே கவசொல்லும்

மண்ணில் தோன்றும் மகிமையுமே
மனதில் தோன்றும் மகிழ்வாக
எண்ணில் கவிதை வரிகளெல்லாம
இயற்கை அழகோ அழகன்றோ
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading