ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திருமணமா

செல்வி நித்தியானந்தன்

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிர்ணயம்
ஆன்றோர்வாக்கு

இருமனங்கள்
ரொக்கத்தில்
இணைப்பது
இன்றையநோக்கு

இருவர் ஒன்றித்து
வாழ்ந்த காலம்
ஒருவரை முறித்து
வாழும் கோலம்
இளசுகள் இப்போ
தனிமை வாழ்வு
பளசுகள் போல
பதிலடி நோவு

விருப்பம் மட்டும்
வினாவாய் தோன்றும்
விடைகாண முடிவும்
விரிசலாய் போகும்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading