” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமணம்

ஜெயம் தங்கராஜா

இருமனங்கள் ஒருமனமாகும் அதிசயத்தின் நாள்
திருமணமாகி ஈருயிர் ஓருயிராகும் திருநாள்
பருகிடும் தேனிலும் சுவையான உணர்வாம்
இருவரும் அனைத்தும் மறந்திடும் கணமாம்

சிறக்கடித்து பறக்கும் இளமையின் ஆசை
உறவொன்றின் அருகாமையில் சுகங்களின் ஓசை
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிந்து
இருவரும் படைப்பாரே ஆனந்த விருந்து

வயது முதிர்ந்தாலும் விலகுமா சொந்தம்
துயர இருட்டிலும் வெளிச்சமாகும் பந்தம்
சந்ததி பெருக்கவே ஏற்படுத்தும் நிகழ்வு
இந்த நாளிலன்றோ கிளைபரப்பும் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan