அலை

ராணி சம்பந்தர்

இடி மின்னலோடு கடைந்திடும்
மழை நீரோ மோராகிக் கடலில்
குடைந்து குடித்த அலையினது
குடலோ முட்டிக் குவளையாகக்
குமிழ் விட்டுக் குதூகலித்தவன்

கண்ணுக்கெட்டிய தூரங் காணும்
மண் தொட்டு முத்தமிட்டே முட்டிய
குமிழ் நுரையைக் கரை சேர்த்துத்
திரும்பிப் பாராது செல்லும் பார்
போற்றும் காவியக் கதாநாயகன்

எட்டி எட்டி வானந் தொட்டுத் தலை-
குத்துக்கரணமிட்டு வாலை வாலை
ஆட்டிடும் கதாநாயகி அழகு மீனோடு
விளையாட வானளவு உயரப் பாயும்
பேரலையோ மிதந்து வரும் கப்பலைக்
கட்டிப்பிடித்துக் காலால் உதைத்துக்
கவிழ்த்தவனும் இந்த அலையே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading