பசுமை

செல்வி நித்தியானந்தன்
பசுமை

பசுமை என்றாலே
பார்க்கும் விழிகளில்
பரவசம் உண்டாகும்
பாரும் செழிப்புறும்
மரம்செடி கொடியும்
பசுமை காட்சியாகும்
மழையும் பொழிந்து
உயிர்ப்பாய் சாட்சியாகும்
பசிபோக்க விலங்கும்
புற்களை உண்டிடும்
பறவையும் புசிக்க
பசுமையை நாடிடும்
தெருவோர மரமும்
தென்றலாய் தழுவும்
தருவும் அழித்து
பசுமை மறையுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading