பாசப்பகிர்வினிலே….

ரஜனி அன்ரன் (B.A) பாசப்பகிர்வினிலே…. 08.05.2025

பாசமென்பது வெறும் வார்த்தையல்ல
நேசஉணர்வின் ஆழத்தில் பாயும்நதி
உயிருக்குள் உயிர்தந்த உத்தமி
உணர்வோடு உறைந்திருக்கும் இசையருவி
கடவுள் தந்தவரம் கருணையுள்ளம்
வரமாகக் கிடைத்த அன்புறவு
அன்னையில்லா இல்லம் வெற்றிடமே !

பாசப் பகிர்விற்கு இலக்கணம்
அன்பின் உச்சம் அன்னை
அன்னையின் பாசத்திற்கு அளவீடுஏது
அவளின்றி பாசப்பகிர்விற்கு எல்லைதான்ஏது
அனுதினமும் வாட்டுது அவள்நினைவு
அவளின்றிய வாழ்வு என்றும் வெறுமை
இல்லாதபோது புரிகிறது அன்னையின் அருமை !

நிலவின் ஒளியாக மெளனமொழியாக
நித்தமும் வந்திடுவாள் மெல்லிசையாய்
நினைவுகளை மீட்டிடுவாள் துள்ளிசையாய்
பாசப்பகிர்வின் பேரொளி
பத்துத்திங்கள் சுமந்த சுடரொளி !

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading