கான மயில்

ஜெயம் தங்கராஜா

கான மயிலாட காணும் விழியாட
அழகாய் இறகாட மயங்கி உயிராட
களிப்பால் அதுவாட மனமும் முழித்தாட
அசைவால் மதுவூற உணர்வில் வெறியூற

தன்னை தொலைத்த புலவர்களைப் பாரீர்
கண்ணைத் தொலைத்த கலைஞனையும் பாரீர்
விரிக்கையிலே தோகை மெய்யுமிங்கு சிலிர்த்திட்டுமே
திரிகின்ற மேகத்தில் மழையும் துளிர்த்திட்டுமே

பச்சை வண்ண மரகத மேனி
இச்சை கொண்டோர் மனமோ தேனி
கனக அழகின் நடனத்தால் மெய்மறப்பு
நனவே கனவாகும் அற்புத சிறப்பு

பாதத்தை வைத்து தூக்கியும் நின்றாட
பாடியே கொண்டையை பாவலன் தனைமீற
மயிலின் மனமகிழ்ச்சி அழகியதோர் நிகழ்ச்சி
உயிரும் குதூகலிக்க ஆயுளிங்கு வளர்ச்சி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading