களவு

ராணி சம்பந்தர்

காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப் பலகிப்‌ பெருகிறது

நாலு பக்கமும் ஞாலங் காட்டுகிறது
நூலற்ற மெழுகுதிரியாயக் கண்கள்‌
மின்னி கால் பின்னிட கன்னமிடுகிறது

சொந்தமற்ற பொருளை ஏமாற்றிப்
பலாத்காரம் பிடுங்கியே எடுக்கிறது பறிக்கும் கொள்ளை ஆட் கடத்தல் ,
கொலை,வெட்டுக் குத்துச் தொடர

அள்ளியதில் குடியும் குதூகலமும்
கூத்தும் போதையும் கூடியாடுகிறது
சூளும் சூதுகள் வீழும் வரையிலும்

பாழும் அவர் மனம் மாறித் தேறாத
வரையிலும் ருசி கண்ட பூனைகளில்
களவு மாறாத அலங்கோல அவலமே.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading