புத்தி தடுமாறுதலால்

புத்தி தடுமாறுதலால்
செல்வி நித்தியானந்தன்

ஓடிஓடிதேடும் உழைப்பு
ஓய்வு இன்றி நாடிய புழைப்பு
உடல் நோவு பெருங் களைப்பு
உபதேசம் மட்டும் பாரிய எடுப்பு

நீண்ட சோகசுமை முள்ளாய் குத்த
நீள் வலிகள் என்னையே துரத்த
வேதனை வடுக்கள் நெஞ்சை தாக்க
போதனை தினமும் அமைதி காக்க

உறவுகள் தொல்லை உருப்படா முயற்சி
தரவுகள் சொல்லி தருவதோர் பயிற்சி
சுட்டிக் காட்டி சொல்லும் உத்தி
தட்டிக் கழித்து கேட்காத புத்தி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading