திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

“இலட்சிய வாதி”

நேவிஸ் பிலிப் கவி இல(494)

தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய்
கரைந்தாலும் காயாத கற்பூரமாய்
அணைந்தாலும் ஒளி சிந்தும்
சுடரொளியாய்

நெஞ்சங்களில் நிழலாகி
நினைவோடு சங்கமித்தாய்
இலட்சியங்களோடு வாழ்ந்ததால்
இன்று வரலாற்றில் வாழ்கின்றாய்

அகிம்சையே ஆயுதமாய்
இனமானம் உனதாக்கி
கனமான உள்ளத்தில்
தமிழீழத் தாகம் கொண்டாய்

மன ஒடுக்கம் நிதம் கொண்டு
உண்ணா நோன்பு நோற்று நின்றாய்
உடல் விட்டு உயிர் நீங்கும் வரை
மௌனமாய் போர் தொடுத்தாய்

தன்னலமற்ற செயல் பாடும்
உன் சுய அர்ப்பணிப்பும்
எமை மீட்டும் நினைவுகளாக -நீயோ
துளிர் விட்டு வளர்கின்றாய்
நன்றி,,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading