முத்தேவியர் அருள்

நகுலா சிவநாதன்

முத்தேவியர் அருள்

கல்வி வீரம் செல்வம் என்று
கனிவாய்க் கொடுக்கும் முத்தேவியர்
பல்கிப் பெருகும் அருளாலே
பயனும் உண்டு பாரினிலே
செல்வம் செழித்து வளர்ந்திடவே
செருக்கு இல்லா வாழ்வமைய
நல்ல கல்வி நாம் பெற்று
நன்றே வாழ்வோம் வீரத்துடன்

நவமாய்ப் பெருகும் நல்வாழ்வில்
நன்மை யுண்டே உலகினிலே
தவமாய் யான பொழுதுகளும்
தவிப்பே யின்றிப் பெருகட்டும்
யுகமாய் அன்பு பெருகிவிட்டால்
யுத்தம் மொன்றும் வராதென்பர்
நித்தம் கடவுளை வணங்கினின்றால்
நினைவு நல்லது கிடைத்திடுமே

தேவியர் அருளும் நன்னாளில்
தேசம் யாவும் மகிழ்வேந்த
ஞாயிறு உதித்து நலம்காக்க
நவராத்திரியும் வளம் காக்கும்

நகுலா சிவநாதன் 1822

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading