தங்கமே ௨ந்தனுக்கு

Vajeetha Mohamed முகம் தெரியா முகவரியே
முகில் தவழும் வான்மதியே
கோர்த்து வைத்த மாணிக்கமே
சேர்த்து இணைந்த தேனழுதே

வென்பாய் சிரிப்பு சிதறிவிழும்
வெறுநடை செழிப்பு தாண்டிவ௫ம்
பால்மனம் மாறா பவளம் நீ
பரிமாண பாசத்தின் ௨றவும் நீ

தூக்கி அணைக்கும் ௨ணர்வுக்குள்
துயிலாநினைவு என்னுயி௫க்குள்
இறையுணர்வும் அறநெறியும்
தரித்த நாள் அகவையிரண்டு

தங்கமே தாலாட்டி வாழ்த்துகின்றேன்
தத்தித் தடுமாறி பேசும் ௨ம்மழகு
தரணியே ஓர் மொழிக் கவிதையிழகு
வாழ்க இறையாசி பெற்று என்றுமே

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading