நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

எனது மனது

கவி இலக்கம் :28
எனது மனது.

எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று

இந்த உலகில்
நாம் படைக்ப்பட்டது
ஏன்?

நம்மைப் படைத்தது
யார்?
எப்படிப்
படைத்தார்கள்?

நம்மை
படைத்தவர்களுக்கு
நம்மால்
என்ன பயன்?

ஒரு வேளை
அவர்களின்
தேவைக்காக.,

நம்மை அவர்கள்
படைத்தது
அவர்களின்,

தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்க்காக
போலும்.

அவர்களது
தேவைகள் எவை?
என்று தான்
தெரியவில்லை!

இப்படியும் இருக்கலாம்
நம்மைப் படைத்து,

நம் மூலம்
எப்படிப் பட்ட
குணங்களை,

உயிர்களுக்குக்
கொடுக்கக் கூடாது
என்று பரிசோதிப்பது
போல் தெரிகிறது.

விண்ணவன் – குமுழமுனை.

Author: