ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர் தங்கள் உறவுகளை
களைந்தனர் தங்கள் உணர்வுகளை அஞ்சாமல்
மதித்தனர் துச்சமென தங்கள் உயிர்களை
துறந்தனர் தங்களையே தமிழினத்து விடுதலைக்காக
காலத்தால் அழியாத காவியங்கள் அவர்கள்
காலம் எல்லாம் பூஷிக்கப்பட வேண்டியவர்கள்
சந்தனப் பேழைக்குள் சமாதியானவர்கள்
காலை வேளையில் உணர்வுகள் கானங்களால்
ஆத்மராகம் ஆகட்டும் அவர்கள் ஆத்மாக்களுக்கு!

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading