நிழலாடுதே நினைவாயிரம்……

“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026

காலத்தின்சுவடுகள் காத்திரமான பொக்கிஷங்கள்
காலப்பெட்டகத்தின் சித்திரங்கள் நினைவுகள்
நினைவுகள் ஆயிரமாய் நெஞ்சினில் நிழலாட
நினைவுகள் சிலவோ மருந்தாக
நினைவுகள் பலவோ ஆறாதகாயமாக
ஆழ்மனதில் புதைந்திருக்க
நினைவெல்லாம் சிறகடிக்குதே தாய்நிலம் நோக்கி !

சொந்தங்கள் சூழ்ந்த சுகமானகாலம்
அறுவராய்க்கூடி வாழ்ந்தகாலம்
அடிபட்டுஉண்டு மகிழ்ந்தகாலம்
பண்டிகை விழாக்கள் என்றால்
வீடேகலகலக்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும்
சிர்ப்பிற்கு பஞ்சமில்லை கவலைக்கும் இடமில்லை
பணம்குறைந்தாலும் பாசத்திற்கு குறைவேயில்லை
நிழலாடுதே நெஞ்சினில் நினைவுகள்ஆயிரமாய் !

இன்று எல்லோரும் வாழ்க்கையின் பிணைப்பில்
நான்குதிசைகளிலும் திசைமாறிய வாழ்வு
ஆனாலும் ஒன்றுகூடுவோம் – எனும்
நம்பிக்கையில் தொடர்கிறது வாழ்வு !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading