நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நினைவாயிரம் நிழலாடுதே!

நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!

நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம் கனவானதே!
உருவினில் வந்துதித்த மகளாலே!

டாக்டர் பட்டமும் கிடைத்திட்ட கணம்
நினைவுகளில் இன்னமும் நிழலாடுதே!
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில்
பாராட்டுப்பெற்ற கணம் மகிழ்தது தாயுள்ளம்
விதத்தது கல்வியின் விருட்சத்தை கண்டு!

எத்தனை நாட்கள் கனவிருந்த உயர்படிப்பு
அத்தனையும் நினைவானதே இன்று!
பேராரியர்கள் வாழ்த்த பட்டமும் உச்சரிக்க
பாராட்டுப் பெற்றுயர்ந்த வேளை
உகுத்ததே! ஆனந்தக் கண்ணீர்
உவகை கொண்டோம் குடும்பமாய்

நகுலா சிவநாதன் 1840

Author: