28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே
உணர்வினில் கலந்தஉயிரே என்உயிரின் துடிப்பு நீயே
நிழலாய்வந்து நிலைகொண்டு
நிஜமாய்வாழும் என்பாதி நீயே !
எங்கோபிறந்து எங்கோவளர்ந்து இணையாகிய
ஏதுமறியாச் சொந்தமிது ஏழேழுஜென்மப் பந்தமிது
உன்னோடுவாழும் ஒவ்வொரு நொடியும்
ஆத்மபலத்தை வாழ்வின் பந்தத்தை
ஆயுள்கடந்தும் எடுத்துச் செல்லுமே
வாழ்வியல் பயணத்தில் வலிகள்வந்தாலும்
உன்கைபிடித்து நடக்கையில் வசந்தமாகிறது வாழ்வு !
முத்துவிழாப் பந்தமிது முத்திரைபதித்த விந்தையிது
முத்துக்கள் மூன்றோடும் முத்தாய்ப்பான வாழ்விது
சட்டென்று கோபம்வந்தாலும்
பட்டென்று மறந்துவிடும் பாசக்காரன்நீ
என்னுயிரே மண்வாசம் மழைக்குச்சொந்தம்
உன்சுவாசம் எனக்கே சொந்தம் !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...