” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிரான உறவு 86

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026

உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என்
மூச்சுள்ள வரை உனை சுமப்பேன்

பல பிள்ளை ஈன்றபோதும்
பாரபட்சமன்றி பாசம் தந்து
திகைக்க வைக்கும் அன்பு மழையே
தித்திக்க வைக்கும் தெய்வீகச் சுடரே!

பிள்ளையின் கனவை தன்
பெரும் வாழ்வாய்க் கொண்டு
வெற்றிக்காய் பாடுபடுபவரே
வெண்மை உள்ளம் கொண்டவளே

சொல்லில் வடிக்க முடிக்கா காவியமே
சொற்களும் உன்னிடம் தோற்குமே
உயிரான உறவு நீயே அம்மா..
உன்னைப் புகழ வார்த்தை இல்லை எனக்கு….

Jeba Sri
Author: Jeba Sri