“அன்பின் வழியினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(563)

அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே நாடி நின்றால்
ஈடில்லா பேரின்பம் கோடி பெறும்

அன்பென்ற பண்பொன்றே
பலத்தைக் கூட்டும்
மாந்தர்க்கு பயன் கருதா
செயல்பாடே மனதிலோங்கும்

புரிதலில் செழிக்குமன்பு
மன்னிப்பில் மலர்ந்து நிற்கும்
கொடுப்பதில் மனம் மகிழ்ந்து
பொறுப்பதில் பெருமை கொள்ளும்

வேதனை துன்பம் வெறுப்பின்றி
மேலான நல் வாழ்வு வாழ்வதற்கே
போதனைகள் நன்நெறிகள் மனதிலேற்று
இறையன்பை உணர்ந்து இன்புற்று

அன்பொன்றே மேலாக கொண்டிடுவோம்
மேதினியில் மேன்மை பெற்றே வாழ்ந்திடுவோம்
அன்பென்னும் விதையை விதைத்திடுவோம்
அன்பையே நாளும் வளரத்தெடுப்போம்…..
அன்புடன் நன்றி ………

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading