எங்கே அமைதி

தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி
பாசத்தை சிறிதும் அறியான் ஆனால்
பூமியில் புனிதம் கண்டடைய முயல்கின்றான்

அமைதி என்பது எங்கே இருக்கும்
அது நீதியின் நெஞ்சிலே உதிக்கும்
நேசத்திற்கு எங்கெல்லாம் தட்டுப்பாடோ அங்கெல்லாம் அமைதி மரிக்கும்

கோபத்தை இன்னும் களையவில்லை ஆனால்
ஆலயம் தினசரி செல்கின்றாய்
பொறாமை அதுவும் அகலவில்லை
ஆனால் பக்தியோடு பிராத்தனை செய்கின்றாய்

அன்னையின் அரவணைப்பில்
அமைதி துயிலும்;
தந்தையின் ஆறுதலில்
அமைதி சிரிக்கும்

அமைதி எங்கே அது தொலைவிலில்லை தொலையவுமில்லை
இன்னும் இதயத்துள்
காத்திருக்கின்றது
Jeyam

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading