“முதுமை போற்றி போற்றி”

நேவிஸ்பிலிப் கவி இல(579)

பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும் முதுமை முடி சூட
திரையென முளைத்தது முதுமை

அநுபவ விருட்சங்களாய்
பண்பாடுகளின் இருப்பிடமாய்
ஆயுள் நீட்சியின்அடையாளமாய்
குடும்பத்தின் பல்கலைக் கழகமாய்

இவர்களின் நினைவுப் பெட்டகங்களில்
புதைந்து கிடக்கும்
பழங்கால நினைவுகள்
பாதுகாக்கப்பட வேண்டிய
பொக்கிசங்கள்

இவர்கள் பூமிக்கு சுமையல்ல
பூமியைச் சுமந்து நின்ற
கடந்த கால சுமை தாங்கிகள்
நம் வாழ்க்கையில் கிடைத்த வரங்கள்

நம் இல்லத்தின் நாளாந்த
வாசிப்பிலும் நேசிப்பிலும்
நம்மோடு கூட இருக்க வேண்டிய
ஜீவ காவியங்கள் எனவே
முதுமையை போற்றுவோம்
வீட்டிலும் நாட்டிலும்
நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading