நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன்

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும் மழைநீரை
வண்ணமுடன் ஏந்தி நிற்கும்
மண்வளமே!

தண்ணீருக்காய் திரண்ட மக்களுக்கு
மானிட தாகத்திற்காய்ப் பொழியாயோ?
போர் மேகம் குண்டு மழை பொழிய
பொல்லாத ஏவுகணைகள் மண்மீது வெடிக்க
தண்ணீருக்கு போரே தடையாக வந்ததோ!

வானமே எல்லையாய் வாழ்க்கையே உனைநோக்கி……
ககனத்துறும் மழைநீரே வாரிப்பொழிவாய்
வாழ்வாங்கு வாழ
தண்ணீருக்காய் திரளும் மேகமே!
தடையின்றி முனைப்போடு பொழிவாயோ?
படைசூழ்ந்து வந்தாலும்
பலமோடு பெய்யாயோ?

(ககனம்- வானம்)

நகுலா சிவநாதன் 1848

Author: