” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன்

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும் மழைநீரை
வண்ணமுடன் ஏந்தி நிற்கும்
மண்வளமே!

தண்ணீருக்காய் திரண்ட மக்களுக்கு
மானிட தாகத்திற்காய்ப் பொழியாயோ?
போர் மேகம் குண்டு மழை பொழிய
பொல்லாத ஏவுகணைகள் மண்மீது வெடிக்க
தண்ணீருக்கு போரே தடையாக வந்ததோ!

வானமே எல்லையாய் வாழ்க்கையே உனைநோக்கி……
ககனத்துறும் மழைநீரே வாரிப்பொழிவாய்
வாழ்வாங்கு வாழ
தண்ணீருக்காய் திரளும் மேகமே!
தடையின்றி முனைப்போடு பொழிவாயோ?
படைசூழ்ந்து வந்தாலும்
பலமோடு பெய்யாயோ?

(ககனம்- வானம்)

நகுலா சிவநாதன் 1848

Author: