” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு”

நேவிஸ் பிலிப் கவி இல (589)

விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை புசித்து
சுத்த காற்றை சுகமாய் சுவாசித்து
மாசற்ற உலகினிலே நோயற்று
வாழ்நதனர்நம் முன்னோர்

காலம் மாறியது சுகாதார வாழ்விற்கு
சுத்தமே மூலம் தூய்மையே பாலம்
என்பதை மறந்த மனிதர்
ஐம்பூதங்களை சீரழிக்க

பசுமை நிறைந்த மரங்கள்அழிய
பருவ மழை பொய்க்க
வரட்சி எங்கும் நிலவ
மாசில்லா காற்றுக்காய்
உயிரினங்கள் ஏங்க

கழிவு நீர்த் தேக்கங்களில்
கிருமிகள் வாழ
பெருகி வரும் வாகனங்கள்
நச்சுப் புகை உமிழ

ஆகாயவெளி எங்கும் கரும்புகை
போரின் அவலம்
எங்கும் அசுத்தம்
நோயின் தாக்கம்

மரணத்தின் விளிம்பில்
மக்களின் ஓலம்
மாசற்ற உலகுக்கும்
நோயற்ற வாழ்வுக்கும்
ஏங்குது உலகு
நன்றி………

Author: