ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி

பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி

சரியெது பிழையெது யாரறிவார்
சூழலைச் சார்ந்தே விதிமுறைகள்
சூத்திரப் பொறிமுறை வரைவோர்கள்
பந்தியில் முந்தி படம் வரைவார்

நாளை என்பது நமதென்றால்
எண்ணிய யாவும் நிறைத்திடலாம்
நிலைத்திடும் கணத்தை நிலைப்பிடவே
முடியா மாந்தர்கள் வாழ்வின் நிலை

இற்றைக் கணமே உனதென்றால்
சட்டென முடிந்தவை செயல் கொள்வாய்
வாழ்வைத் தொலைத்து வனப்பெழுதும்
கனவுப்பயணம் நீளமில்லை

புரிந்தால் தெரிந்தவை தெரிவிலிட்டு
தேறிய பொழுதினை பயனெழுது

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading