திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி

பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி

சரியெது பிழையெது யாரறிவார்
சூழலைச் சார்ந்தே விதிமுறைகள்
சூத்திரப் பொறிமுறை வரைவோர்கள்
பந்தியில் முந்தி படம் வரைவார்

நாளை என்பது நமதென்றால்
எண்ணிய யாவும் நிறைத்திடலாம்
நிலைத்திடும் கணத்தை நிலைப்பிடவே
முடியா மாந்தர்கள் வாழ்வின் நிலை

இற்றைக் கணமே உனதென்றால்
சட்டென முடிந்தவை செயல் கொள்வாய்
வாழ்வைத் தொலைத்து வனப்பெழுதும்
கனவுப்பயணம் நீளமில்லை

புரிந்தால் தெரிந்தவை தெரிவிலிட்டு
தேறிய பொழுதினை பயனெழுது

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading