கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

“கனவுப் பயணம்”

நேவிஸ் பிலிப் கவி இல (604)

காட்டு வழிப் பயணமது
கரடு முரடான
ஒற்றையடிப் பாதையிலே…
தனித்து நடக்கிறேன்

தனிமை நெஞ்சில் கொஞ்சம்
திகில் ஊட்ட மிரள்கின்றேன்
ஆளரவம் ஏதுமில்லை
அக்கம் பக்கம் யாருமில்லை

திடீரென என்னருகே
கழுகொன்று பறந்து வந்து
சிறகால் எனை அணைத்து
வான் வெளியில் தூக்கிச் சென்று

கடலாறு மலை கடந்து
பசுஞ்சோலைதனை அடைந்து
பக்குவமாய் இறக்கிவிட
பால்நிலா ஒளியினிலே
சொர்க்க பூமி நான்கண்டேன்

சுற்றிச் சுழன்ற பார்வையிலே என்
அன்னை தந்தை அக்காக்கள்
அண்ணன் தம்பி யாவருமே
அன்போடெனை அணைத்திடவே
அம்மாவென்றலறியே கண்விழித்தேன்
கனவென திகைத்தேன்.
நன்றி ….”…

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading