திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

“கனவுப் பயணம்”

நேவிஸ் பிலிப் கவி இல (604)

காட்டு வழிப் பயணமது
கரடு முரடான
ஒற்றையடிப் பாதையிலே…
தனித்து நடக்கிறேன்

தனிமை நெஞ்சில் கொஞ்சம்
திகில் ஊட்ட மிரள்கின்றேன்
ஆளரவம் ஏதுமில்லை
அக்கம் பக்கம் யாருமில்லை

திடீரென என்னருகே
கழுகொன்று பறந்து வந்து
சிறகால் எனை அணைத்து
வான் வெளியில் தூக்கிச் சென்று

கடலாறு மலை கடந்து
பசுஞ்சோலைதனை அடைந்து
பக்குவமாய் இறக்கிவிட
பால்நிலா ஒளியினிலே
சொர்க்க பூமி நான்கண்டேன்

சுற்றிச் சுழன்ற பார்வையிலே என்
அன்னை தந்தை அக்காக்கள்
அண்ணன் தம்பி யாவருமே
அன்போடெனை அணைத்திடவே
அம்மாவென்றலறியே கண்விழித்தேன்
கனவென திகைத்தேன்.
நன்றி ….”…

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading