” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“கனவுப் பயணம்”

நேவிஸ் பிலிப் கவி இல (604)

காட்டு வழிப் பயணமது
கரடு முரடான
ஒற்றையடிப் பாதையிலே…
தனித்து நடக்கிறேன்

தனிமை நெஞ்சில் கொஞ்சம்
திகில் ஊட்ட மிரள்கின்றேன்
ஆளரவம் ஏதுமில்லை
அக்கம் பக்கம் யாருமில்லை

திடீரென என்னருகே
கழுகொன்று பறந்து வந்து
சிறகால் எனை அணைத்து
வான் வெளியில் தூக்கிச் சென்று

கடலாறு மலை கடந்து
பசுஞ்சோலைதனை அடைந்து
பக்குவமாய் இறக்கிவிட
பால்நிலா ஒளியினிலே
சொர்க்க பூமி நான்கண்டேன்

சுற்றிச் சுழன்ற பார்வையிலே என்
அன்னை தந்தை அக்காக்கள்
அண்ணன் தம்பி யாவருமே
அன்போடெனை அணைத்திடவே
அம்மாவென்றலறியே கண்விழித்தேன்
கனவென திகைத்தேன்.
நன்றி ….”…

Nada Mohan
Author: Nada Mohan