திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கனவுப் பயணம்

இரா.விஜயகௌரி

நினைவுப்புதையல்களை
நித்தம் சுமந்த படி – கனவுப்பயணம்
காலாவதியாகும் – நொடிதனை நோக்கி
தேடல்கரங்களுடன் கானல்பயணம்

நாளை நொடிக்கென காணும் கனவு
நாளைய வாழ்வை எழுதிடும் கனவு
சலிக்கும் போது விதைத்தெழும் கனவு
சாகா வரமாய் உயிர்த்தெழும் கனவு

வாழ்தலின் நொடியை வரமென எண்ணி
வண்ணக்கனவுள் எழில் சிந்திட வரைந்து
வாழ்தலில் தானே பெருங்கனவுக்கடலுள்
மூழ்கித் திளைப்பார் பேதமையின்றி

எண்ணமும் செயலும் இணைந்து வரையின்
பொருள்படு வாழ்வு செயலுறும் கனவாய்
தொலைத்த நொடியுள் தோற்றிடும் பயணம்
முகிழ்ந்தெழும் கனவு முனைப்பிடும் எழிலை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading