கனவுப் பயணம்

இரா.விஜயகௌரி

நினைவுப்புதையல்களை
நித்தம் சுமந்த படி – கனவுப்பயணம்
காலாவதியாகும் – நொடிதனை நோக்கி
தேடல்கரங்களுடன் கானல்பயணம்

நாளை நொடிக்கென காணும் கனவு
நாளைய வாழ்வை எழுதிடும் கனவு
சலிக்கும் போது விதைத்தெழும் கனவு
சாகா வரமாய் உயிர்த்தெழும் கனவு

வாழ்தலின் நொடியை வரமென எண்ணி
வண்ணக்கனவுள் எழில் சிந்திட வரைந்து
வாழ்தலில் தானே பெருங்கனவுக்கடலுள்
மூழ்கித் திளைப்பார் பேதமையின்றி

எண்ணமும் செயலும் இணைந்து வரையின்
பொருள்படு வாழ்வு செயலுறும் கனவாய்
தொலைத்த நொடியுள் தோற்றிடும் பயணம்
முகிழ்ந்தெழும் கனவு முனைப்பிடும் எழிலை

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading