” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கனவுப் பயணம்

இரா.விஜயகௌரி

நினைவுப்புதையல்களை
நித்தம் சுமந்த படி – கனவுப்பயணம்
காலாவதியாகும் – நொடிதனை நோக்கி
தேடல்கரங்களுடன் கானல்பயணம்

நாளை நொடிக்கென காணும் கனவு
நாளைய வாழ்வை எழுதிடும் கனவு
சலிக்கும் போது விதைத்தெழும் கனவு
சாகா வரமாய் உயிர்த்தெழும் கனவு

வாழ்தலின் நொடியை வரமென எண்ணி
வண்ணக்கனவுள் எழில் சிந்திட வரைந்து
வாழ்தலில் தானே பெருங்கனவுக்கடலுள்
மூழ்கித் திளைப்பார் பேதமையின்றி

எண்ணமும் செயலும் இணைந்து வரையின்
பொருள்படு வாழ்வு செயலுறும் கனவாய்
தொலைத்த நொடியுள் தோற்றிடும் பயணம்
முகிழ்ந்தெழும் கனவு முனைப்பிடும் எழிலை

Nada Mohan
Author: Nada Mohan