28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)….கதிரும் தமிழும்… 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை உச்சியிலே தமிழின்பிறப்பு
இருளைப் போக்கி ஒளியைத் தருவதுகதிர்
அறியாமை இருளகற்றி அறிவிற்கு ஒளிதருவதுதமிழ் !
காலம் பிறக்கும்முன் உதித்தான் கதிரவன்
கல்தோன்றாக் காலத்தின் ஒளிப்பிளம்பு தமிழ்
கதிர்உலகிற்கு தருவது செந்நெல்வளம்
தமிழ் உலகிற்கு தருவது நன்னெறிவளம்
மண்ணில் உயிர்கள்வாழ கைகொடுப்பான் கதிர்
மனிதம்வாழ அறிவெனும் ஒளிதருவாள் தமிழ் !
கதிரவன் இல்லையெனில் புவியில் உயிர்களில்லை
தமிழ்இல்லையெனில் தமிழர்க்கு முகவரியில்லை
விண்ணில் வாழும்வரை கதிரவன்ஒளிரட்டும்
மண்ணில்மனிதன் வாழும்வரை தமிழும்வளரட்டும்
கதிரவன்வெப்பம் இப்போஉச்சம்
தமிழின்சுவையோ எப்போதும்உச்சம் !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...