நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணி..!!

வியாழன் கவி-2348

பதியமிடும் எழுத்தாணிகள்..!!

விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில் பட்டு
படைக்கும் ஆற்றல் கொண்டோரே

பாமுக பக்கங்கள் பல்விதமாய்
பாலர் தொட்டு மூத்தோர் வரை
திக்கெட்டும் தமிழ் மணம் பரப்ப
உறுதுணையே எழுத்தாணிகளாம்

பொழுதினைப் பழுதென கழிக்கா
விழுதுகள் வீச்சொடு நடக்க
அழுத்தியே பொறித்தன எழுத்தை
பதியமிட்டே பயணிக்கும் செருக்காய்

சிகரம் தொடும் சிந்தனை அருவி
சிதறா கருத்துக்கள் அள்ளி பெருக்கி
கல்லில் பொறிப்பது போல் செருகி
கடந்து நிற்கும் காலங்கள் சான்றாம்..
சிவதர்சனி இரா
4/6/2026

Nada Mohan
Author: Nada Mohan