நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி

பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்

கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும் ஒலியுமல்ல இவள்
உணர்ந்தெழுந்து மொழியழைந்து
குலவி நின்று செவி தொடுவாள்

உணர்வின் இழை உலகளக்கும்
பாமுகத்தாய் தொட்டணைத்து
பரிவுடனே அமிழ்திழைய -இவள்
பேதமின்றி உயர்ந்தெழுவாள்

உச்சி முகர்ந்தெழுந்து ஊரறிய
முரசறைய தாயவள் தான் தவித்தலைவாள்
இளையவர்தாம் உணர்வாரா -இவள்
பாச இழை பற்றின் வலி

ஈர் பத்தின் ஓர் இழையை தொடுகின்றபேருவகை
பதியமிடுத் எழுத்தாணி பாரினிலே
உயர்ந்தெழுந்து உவகை கொள்ள
மடியேந்தி பெரு வாழ்த்து பாமுகமாய்…..

Nada Mohan
Author: Nada Mohan